Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி : இந்தியா குடியரசு ஆகி 72வது குடியரசு தினம் இன்று இந்தியா முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி கண்டோன்ட்மென்ட் அருகே உள்ள ராணுவ போரில் தன் இன்னுயிரை நீத்த மேஜர் சரவணன் அவர்களின் சிலை அருகே புனித வளனார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சார்பாக அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
முன்னதாக இதற்கான வரவேற்புரையினை ஆல்பர்ட் ராபரா வழங்கினார். பேராசிரியர் அருமை ராஜ் மேஜர் சரவணன் அவர்களின் வீர செயல்கள் பற்றி எடுத்துரைத்தார். சிறப்பு அழைப்பாளராக இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மற்றும் புனித வளனார் முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.
விழா தலைவர் சிறப்பு அழைப்பாராக பீட்டர் சேவியர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் ஆடிட்டர் ராய் ஜான் தாமஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.